உள்ளாட்சித் தேர்தல்: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாளஇல் 157 பேர் மனு தாக்கல்
நெல்லை: உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கிய முதல் நாளே நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 157 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் 17,19 ஆகிய இரண்டு தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 36 டவுன் பஞ்சாயத்துகள், 26 மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், 19 பஞ்சாயத்து யூனியன்கள், 425 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் அந்தந்த உள்ளாட்சிகளில் நேற்று காலை துவங்கியது.
நெல்லை மாவட்டதில் கோபாலசமுத்திரம் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு இருவரும், கிராம பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தென்காசி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை பஞ்சாய்த்து யூனியன்களில் தலா ஒருவரும், கிராம பஞ்சாய்தது வார்டு உறுப்பினர் பதவிக்கு பாளையங்கோட்டை யூனியனில் 23 பேரும், கீழப்பாவூர் யூனியனில் 21 பேரும், நாங்குநேரியில் 11 பேரும், மானூரில் 10 பேரும், ஆலங்குளத்தில் 7 பேரும், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், தென்காசி யூனியன்களில் தலா 6 பேரும் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கடையம், காளக்காட்டில் தலா 5 பேரும், செங்கோட்டை யூனியனில் 4 பேரும், மேலநீலிதநல்லூர் யூனியனில் 3 பேரும், குருவிகுளம், வள்ளியூர் யூனியனில் தலா இருவரும், ராதாபுரத்தில் ஒருவருமாக மொத்தம் 115 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
கடையநல்லூர், அம்பாசமுத்திரம், பாப்பாக்குடி, சேரன்மகாதேவி ஆகிய 4 பஞ்சாயத்து யூனியன்களில் ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.
இதே போல் மாநகராட்சி மேயர், கவுன்சிலர், நகராட்சி தலைவர், கவுன்சிலர், பஞ்சாயத்து, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும் நேற்று ஒருவர் கூட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் முதல் நாளான நேற்று மட்டும் 157 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications