கொமுக ஒரு கோமாளி முன்னேற்ற கழகம்-முன்னாள் அமைச்சர் என்கேகேபி ராஜா கிண்டல்
ஈரோடு: உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.-வுடன் கூட்டணி அமைத்துள்ள கொங்குநாடு முன்னேற்ற கழகத்தை கோமாளி முன்னேற்ற கழகம் என்றே கூறலாம் என வர்ணி்த்துள்ளார் தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், ஈரோடு, தி.மு.க. அலுவலகத்தில் நடந்தது. அப்போது வேட்பாளர்களை அறிமுகப்படுத்திய தி.மு.க. முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது, உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தனித்துப் போட்டியிடுவதால் தொண்டர்கள் உற்சாகமாக பணியாற்றி வருகின்றனர்.
தி.மு.க. ஆட்சியில் 5 ஆண்டு காலமாக உள்ளாட்சிகளில் செய்துள்ள பணிகளை மக்களிடம் எடுத்துக் கூறி ஓட்டு கேட்போம். தி.மு.க. - அ.தி.மு.க. தவிர, வேறெந்த கட்சியும், ஒவ்வொரு மாவட்டத்திலும் முழுமையாக வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லை.
கடந்த சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் வாய் திறக்காமல் இருந்திருந்தால், ஈரோடு மாவட்டத்தில் தி.மு.க. ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றிருப்போம்.
பா.ம.க.- விடுதலைச் சிறுத்தைகள், கொங்கு நாடு முன்னேற்ற கழகம் ஆகிய ஜாதி கட்சிகளோடு தி.மு.க. போட்டியிட்டதால் தான் தோல்வி ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.-வுடன், கொங்குநாடு முன்னேற்ற கழகம் கூட்டு சேர்ந்துள்ளது கோமாளித்தனமானது. அக்கட்சியை, கோமாளி முன்னேற்ற கழகம் என்றே அழைக்கலாம் என்றார்.
தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜாவின் இந்த பேச்சு கொ.மு.க.கட்சியினரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications