தஞ்சாவூரில் பன்றிக் காய்ச்சல்-34 வயது பெண் மரணம்
Subscribe to Oneindia Tamil

ஒரு காலத்தில் உலகையே பன்றிக் காய்ச்சல் உலுக்கி எடுத்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். தமிழகத்திலும் பல உயிர்களை இது பழிவாங்கியது.
இந்த நிலையில் தஞ்சாவூரில் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. தஞ்சையைச் சேர்நத் நாகேஸ்வரி என்ற 34 வயதுப் பெண்ணுக்கு கடந்த வாரம் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில் அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நாகேஸ்வரி உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கு பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளதா என்பதை அறிய பரிசோதனைகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications