6 நாட்களுக்கு டாஸ்மாக் 'லீவு'-கடைசி நாளில் சரக்குகளை வாங்கி ஸ்டாக் வைத்த குடிமக்கள்!

முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நாளையும், 2வது கட்ட தேர்தல் 19ம் தேதியுடம் நடைபெறுகிறது. 21ம் தேதி வாக்கு எணிக்கை நடைபெறவுள்ளது.
இதையடுத்து அக்டோபர் 15ம்தேதி மாலை 5 மணி முதல் 19ம் தேதி மாலை 5 மணி வரை டாஸ்மாக் மதுக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. மேலும் 21ம் தேதியன்றும் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து நேற்று மாலை 5 மணியுடன் கடைகள் மூடப்பட்டன. கடைகள் 6 நாட்களுக்கு இருக்காது என்பதால் மது வகைகள் கிடைக்காமல் திண்டாடி திணறிப் போய் விடக் கூடாது என்பதற்காக குடிமக்கள் டாஸ்மாக் கடைகளில் குவிந்து விட்டனர். தங்களுக்குத் தேவையான அளவுக்கு மது வகைகளை குறிப்பாக பீர்களை அதிக அளவில் வாங்கிச் சென்றனர்.
டாஸ்மாக் மதுக் கடைகளில் விற்பனை பெருமளவில் சரிந்து விட்டதாக அரசு கவலையுடன் இருந்து வந்தது. ஆனால், கடந்த 2 வாரங்களாக டாஸ்மாக் விற்பனை சற்று அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் தினமும் கூடுதலாக ரூ.15 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை ஆகின்றன. வழக்கமாக தினசரி விற்பனை ரூ.52 கோடி என்ற அளவில் இருக்கும், ஆனால், தற்போது விற்பனை ரூ.67 கூடியாக அதிகரித்து இருக்கிறது. இதனால் அரசு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
தினசரி ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெட்டிகள் விற்பனை ஆகி வந்த நிலையில் இப்போது ஒரு லட்சத்து 70 ஆயிரம் பெட்டிகளாக உயர்ந்துள்ளது. முன்பு தினமும் 70 ஆயிரம் பெட்டி பீர் பாட்டில்கள் விற்பனை ஆகும். இது தற்போது ஒரு லட்சம் பெட்டிகளாக அதிகரித்து இருக்கிறது. நேற்று முன்தினம் விற்பனை ரூ.92 கோடியை எட்டியது. நேற்று ரூ.60 கோடி அளவுக்கு விற்பனை நடந்தது.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி டாஸ்மாக் கடைகளுக்கு 6 நாட்கள் விடுமுறை என்பதால் இந்த அதிவேக விற்பனைக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications