டெல்லி: மோசமான வானிலை காரணமாக, இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் பாகிஸ்தான் எல்லைக்குள் போய் விட்டது. இதையடுத்து அந்த ஹெலிகாப்டரை மடக்கிய பாகிஸ்தான் படையினர் அதில் இருந்த இந்திய வீரர்கள் நான்கு பேரை சிறை பிடித்துள்ளனர்.
ராணுவத்தின் விமானப் பிரிவைச் சேர்ந்த சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று இன்று பிற்பகலில் லே பகுதியிலிருந்து பிம்பத் நோக்கி பறந்து கொண்டிருந்தது. அப்போது மோசமான வானிலை காரணாக எல்லைப் பகுதியை விட்டு விலகி பாகிஸ்தான் விண்வெளிப் பகுதிக்குள் போய் விட்டது. இதையடுத்து விரைந்த பாகிஸ்தான் விமானப்படையினர் இந்திய ஹெலிகாப்டரை மடக்கி கொண்டு சென்றனர். பின்னர் தரையிறக்கினர்.
இந்திய ஹெலிகாப்டரில் இருந்த மூன்று ராணுவ அதிகாரிகள் (விமானி, துணை விமானி, ஜூனியர் கமிஷன் அதிகரி) மற்றும் ஒருவர் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹெலிகாப்டரில் இருந்த இந்தியர்கள் நான்கு பேரும் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களிடம் விசாரணை நடந்து வருவதாகவும் பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் அத்தார் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
நான்கு இந்தியர்களும் நாளை விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது.
An Indian Army helicopter with four personnel on board entered into the Pakistani airspace today, reportedly due to bad weather. The Cheetah helicopter of the Army Aviation, which was flying from Leh to Bhimbat and was reported to have gone missing, was escorted down by Pakistani forces. Three Indian officers officers, including the pilot and co-pilot, and a Junior Commissioned Officer (JCO) onboard have been taken into custody. "The chopper strayed deep inside our territory. The crew is safe and investigations are on", General Athar Abbas, Spokesman of the Pakistan Military said.