விலை உயர்வால் கசக்கும் தீபாவளி அசைவ விருந்து!

இதனால் தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவே, அசைவ விற்பனை படுஜோராக இருக்கும். அதற்கேற்றமாதிரி ஆண்டுதோறும் கறி விலையை ஏகத்துக்கும் உயர்த்துவது கறிக்கடைகாரர்கள் வழக்கம்.
கடந்த ஆண்டு தீபாவளியின்போது ஆட்டுக் கறி விலை திடுமென்று 100 ரூபாய் வரை கிலோவுக்கு உயர்த்தப்பட்டது.
இந்த ஆண்டும் இதே நிலைதான்.
ஆட்டுக்கறிவிலை கிலோ ரூ 450 வரை விற்கப்படுகிறது. சென்னையைத் தாண்டிய புறநகர் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில் ரூ 400 வரை விற்பனையாகிறது.
அதோ போல கோழிக்கறியின் விலையும் கிலோ ரூ 150 ஆகிவிட்டது.
புரட்டாசி மாதம் என்பதால் பலர் கறி சாப்பிடாமல் தவிர்த்துவந்தனர். இதனால் கிலோ ரூ 320 லிருந்து ரூ 350 வரை ஆட்டுக்கறி விற்பனையானது. ஆனால் இன்று சடாரென கிலோவுக்கு ரூ 100 உயர்ந்துள்ளது அசைவப் பிரியர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
வழக்கமாக சென்னைக்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து ஆடுகள் கொண்டு வரப்படும். தேவையான அளவிற்கு ஆடுகள் கிடைக்காததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
10 நாட்கள் முன்பு வரை கறிக்கோழி விலை ரூ.100 ஆக இருந்தது. புரட்டாசி முடிந்ததும் கிலோ ரூ.120, ரூ.130 என படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.150-க்கு விற்கப்படுகிறது.
அமாவாசை தினத்தில் தீபாவளி பண்டிகை வருகிறது. ஆனாலும் கறிக்கோழி விலை குறைய வாய்ப்பு இல்லை. சென்னையில் உயிருடன் கோழி ரூ.110, கறிக்கோழி ரூ.150 ஆக சில்லறை கடைகளில் விற்கப்படுகிறது.
இதேபோல மீன் விலையும் உயர்ந்து உள்ளது. வெள்ளை வவ்வால் மீன் கிலோ ரூ.300-400, கருப்பு வவ்வால் ரூ.160-200, வஞ்ஜிரம் ரூ.400-500 வரை விற்கப்படுகிறது.
விலையைச் சமாளிக்க கிராம மக்கள் டெக்னிக்
தீபாவளியின்போது கிராமப்புறங்களில் கறிவிருந்து கட்டாய சமாச்சாரம். ஆனால் கிலோ ரூ 450-500 வரை கொடுத்து வாங்க அவர்கள் தயாராக இல்லை. எனவே கூட்டாக சேர்ந்து ஆடுகளை வாங்கி வெட்டி, பகிர்ந்து கொள்கின்றனர்.
கிராமங்களில் வெள்ளாடு தவிர செம்மறி ஆடுகளும் அதிகமாகக் கிடைப்பதால், 15-20 கிலோ எடை கொண்ட ஆடுகளை ரூ 3000- 4000 க்கு வாங்கி வெட்டி பகிர்ந்து கொள்கின்றனர்.
கோழிக் கறி விலை பொதுவாகவே கிராமப் புறங்களில் குறைவு. பெரும்பாலும் ஒவ்வொரு வீட்டிலும் நிறைய கோழிகள் வளர்க்கப்படுவதால், அவற்றையே தீபாவளி விருந்துக்குப் பயன்படுத்துவது தொடர்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications