கபிலன் வைரமுத்துவின் நாவல் பாடல்!

முதல்முறையாக ஒரு நாவல் வெளியாகும் முன் அந்த நாவலின் கருவை அடிப்படையாகக் கொண்டு ஒரு பாடல் வெளியாகியிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்துவின் இளைய மகன் கபிலன் வைரமுத்து எழுதி வெளிவரவிருக்கும் "உயிர்ச்சொல்" என்ற நாவலுக்காக இந்தப் பாடல் உருவாகியிருக்கிறது.
நாவல் ஆசிரியர் கபிலனே பாடலையும் எழுதியிருக்கிறார். தென்மேற்கு பருவக்காற்று புகழ் என்.ஆர்.ரஹ்னந்தன் இசை அமைத்திருக்கிறார். ஹரிணி இதற்கு குரல் கொடுத்திருக்கிறார். "ஒவ்வொரு கணமும் ஒரு துகள் இசையே" எனத் தொடங்கும் இந்தப்பாடல் இதமான பாடலாக அமைந்திருப்பதாக தயாரிப்பாளர்- மன்னிக்க வேண்டும்- பதிப்பாளர் வட்டம் தெரிவிக்கிறது.
நாவலின் தலைப்பை பார்த்தால் முழு முதற் காதல் கதையாக இருக்குமோ என்று தோன்றியது. கபிலனிடம் விசாரித்தோம். "நீண்ட நாளா குழந்தைக்கு ஏங்கிக்கிட்டு இருக்கிற ஒரு பெண்ணின் கனவு- குழந்தை பிறந்ததும் அந்த பெண்ணுக்கு ஏற்படற மன அழுத்தம்- அந்த அழுத்தத்துக்கு மருந்தாகும் கணவனின் காதல்- பின்னணில தமிழக அரசியலில் சில புதிய பரிசோதனைகள்- இதுதான் "உயிர்ச்சொல்" என்று நான்கு வரியில் கதை சொல்லிவிட்டார்.
"நீங்க சொன்ன எல்லாமே இந்த ஒரு பாட்டுக்குள்ளா இருக்கா?" என்று கேட்டதற்கு "இருக்கு" என்று யோசிக்காமல் சொல்கிறார்.
"தனக்கு பிறக்கப் போற குழந்தையப் பற்றிய ஒரு தாயின் கனவு- தன் பூமிலமாற்றத்த ஏற்படுத்த விரும்பற இளைஞர்கள பற்றிய தமிழ்த்தாயின் பூரிப்பு- தன் காதலனை நினைக்கும்போது ஒரு பெண்ணுக்குள் ஏற்படற பரவசம்- இந்த மூன்று உணர்வுகள் ஒருங்கிணையற மாதிரி இந்தப் பாடல உருவாக்கியிருக்கோம். ரஹ்னந்தன்- ஹரிணி இவங்க இரண்டு பேரோட அனுபவங்கள் இல்லனா இந்த முயற்சிய தொடங்கியிருக்கவே முடியாது" என்று நெகிழ்கிறார்.
நாவல் பாடலை www.uyirsol.com என்ற இணைய முகவரியில் பெறலாம்.
ஐந்து கவிதைத் தொகுதிகள், ஒரு சிறுகதைத் தொகுதி, ஆஸ்திரேலிய பழங்குடியினரை அடிப்படையாகக் கொண்ட பூமரேங் பூமி என்ற நாவல் ஆகிய புத்தகங்களுக்குப் பிறகு கபிலன் வைரமுத்து எழுதியிருக்கும் இரண்டாம் நாவல் இது. இந்தப் புத்தகத்தை நவம்பர் மாத இறுதியில் கிழக்குப் பதிப்பகம் வெளியிடுகிறது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications