கிரிமினல் வழக்குகளை சுமக்கும் 162 எம்.பிக்கள் மீதான நடவடிக்கை என்ன?- சுப்ரீம் கோர்ட்
டெல்லி: 162 எம்.பிக்களின் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை விசாரிக்க காலதாமதம் செய்வதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்த வழக்குகளை விரைவு நீதிமன்றங்களில் விசாரிப்பது பற்றி மத்திய அரசு கருத்து தெரிவிக்க கோரி நோட்டீஸ் அனுப்பவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்ற எம்.பி.க்களில் 162 பேர் மீது பல்வேறு கிரிமினல் வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகள் நாடெங்கும் உள்ள கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கின்றன. எம்.பி.க்கள் மீதான வழக்கு என்பதால் வழக்கு விசாரணை நத்தை போல நடந்து வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் தேர்தல் கமிஷனர் ஜெ.எம்.லிங்டோ சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தன் மனுவில் எம்.பி.க்கள் மீதான கிரிமினல் வழக்குகள் கவனிக்கப்படாமல் உள்ளன. அந்த வழக்குகளை அதிவிரைவு கோர்ட்டுக்கு மாற்றி விரைவில் விசாரணை நடத்தி முடித்து தீர்ப்பு கூற வேண்டும் என்று கோரியிருந்தார்.
விளக்கம் கேட்டு நோட்டீஸ்
இந்த பொதுநல மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று நீதிபதி சதாசிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு நடைபெற்றது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், 162 எம்.பிக்கள் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் இருப்பது கவலை தருகிறது. நாடுமுழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அதிவிரைவு நீதிமன்றங்கள் உள்ளன. அவற்றில் 162 எம்.பி.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை சேர்த்து விசாரணை நடத்தலாம். இது பற்றி மத்திய அரசு கருத்து தெரிவிக்க வேண்டும் எனக் கோரி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications