நம்பகத்தன்மை அற்றவை: பெட்ரோல் நிறுவனங்களுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்!

Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: பெட்ரோல் விலை உயர்வுக்கு கேரள உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனங்கள் சொல்லும் காரணங்களில் நம்பகத்தன்மை இல்லை. எனவே கணக்கு வழக்குகளைக் காட்ட வேண்டும், என நீதிமன்றம் கண்டிப்பாகக் கூறியுள்ளது.

மேலும், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் தங்கள் வரவு - செலவுக் கணக்கு (பேலன்ஸ் ஷீட்) விவரங்களை தாக்கல் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் ஊழல் புரிவதற்கு முகாந்திரம் இருப்பதாகவும், அவை நம்பிக்கைக்கு உரியவை அல்ல என்றும் கருத்து தெரிவித்துள்ள நீதிமன்றம், விலை உயர்வு என்பது மக்கள் மெதுவாக இறப்பதற்கு சமமானது என்று சாடியுள்ளது.

மேலும் இதுபோன்ற விலை உயர்வை மக்கள் சகித்துக் கொள்ளக் கூடாது என்றும், எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் கோபத்துடன் கூறினர்.

இந்நிலையில், கேரள அரசு தங்கள் மாநிலத்தில் விதிக்கப்படும் மாநில வரிகளைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+