மக்கள் நலப்பணியாளர் நீக்கம் - நவ. 15 ல் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மக்கள் நலப்பணியாளர்கள் நீக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக இளைஞர் அணியினர் ஆர்பாட்டம் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் கடந்த 1989-ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த மக்கள் நலப்பணியாளர்கள் ஏறத்தாழ 13 ஆயிரம் பேரை எந்தவித காரணமுமின்றி அதிமுக அரசு பணிநீக்கம் செய்துள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
எனவே அதிமுக அரசின் பழிவாங்கும் போக்கைக் கண்டித்து வருகிற 15-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. இளைஞர் அணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஸ்டாலின் தலைமை ஏற்பார் என திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications