கரூர் அரசு மருத்துவமனை எதிரே படமெடுத்து ஆடிய பாம்பு: அலறியடித்து ஓடிய மக்கள்
கரூர்: கரூர் அரசு மருத்துவமனை எதிரே பாம்பு ஒன்று படம் எடுத்து ஆடியதால் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
கரூர் அரசு மருத்துவமனை எதிரே ஆசிரியர் வீடு ஒன்று உள்ளது. அவரது வீட்டு முன்பு உள்ள ஒரு மரத்தில் பாம்பு ஒன்று திடீர் என்று படம் எடுத்து ஆடியது. இதைப் பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து அலறியடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
திடீர் என்று சிலர் தெருவில் ஓடுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டவர்கள் அவர்களை நிறுத்தி விவரம் கேட்டு தாங்களும் ஓட்டம் எடுத்தனர். அந்த வீட்டுக்கு அருகில் உள்ள டீ கடைகளில் டீ குடித்துக் கொண்டிருந்தவர்களும், மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளும் அந்த இடத்தை விட்டு ஓடினர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.