தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆசிட் குழாய் உடைந்து ஃபிட்டர் பலி
தூத்துக்குடி: தூத்துக்குடி உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஆசிட் குழாய் உடைந்ததில் ஃபிட்டர் பாண்டியன் என்பவர் பலியானார், என்ஜினியர் சுரேஷ்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்தவர் பாண்டியன்(40). அவர் அங்குள்ள ஸ்டெர்லைட் ஆலையில் ஒப்பந்தம் அடிப்படையில் ஃபிட்டராக வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பசுவந்தனை தெற்கு தீர்த்தம்பட்டியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கெமிக்கல் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். நேற்று அதிகாலை அவர்கள் இருவரும் அங்குள்ள பாஸ்பரிக் ஆசிட் பிளாண்ட்டை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராவிதமாக ஆசிட் குழாய் உடைந்து இருவர் மீதும் ஆசிட் கொட்டியது. இதில் உடல் வெந்த அவர்களை தூத்துக்குடி பாளை ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பாண்டியன் சிகிச்சை பலனின்றி இறந்தார். சுரேஷ்குமாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து ரூரல் டிஎஸ்பி ஜெயக்குமார், சிப்காட் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications