அஸ்ஸாம், நாகாலாந்து, மணிபூரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Subscribe to Oneindia Tamil

குவாஹாத்தி: வடகிழக்கு இந்தியா, மியான்மர் மற்றும் பங்களாதேஷில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியிருந்தது.

இன்று காலை 8.47 மணிக்கு வடகிழக்கு இந்தியா, மியான்மர் மற்றும் பங்களாதேஷில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு அஸ்ஸாம், நாகாலாந்து மற்றும் மணிபூரிலும் உணரப்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்தனர்.

இந்த நிலநடுக்கம் மணிபூர் தலைநகர் இம்பாலிலின் கிழக்கில் இருந்து 130 கிமீ தொலைவில் உள்ள மியான்மரை மையமாகக் கொண்டு ஏற்பட்டது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம், மேகாலயா, மிசோரம், திரிபுரா, நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் மணிபூர் நில நடுக்கம் ஏற்படும் இடத்தில் அமைந்துள்ளது என்று புவி அறிவியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1897ம் ஆண்டு இந்த பகுதியி்ல் 8.7 அளவுக்கு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சுமார் 1,600 பேர் பலியாகினர். இது தான் இந்த பகுதியில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கம் ஆகும்.

கடந்த செப்டம்பர் மாதம் இந்த பகுதியில் 6.8 அளவுக்கு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+