ஊழல் விசாரணையால் மன உளைச்சல்- டிஎன்பிஎஸ்சி அதிகாரி தற்கொலை முயற்சி
சென்னை: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதால் மனம் உடைந்த அதிகாரி தமிழ்நாடு தேர்வாணைய அலுவலக அறையிலேயே தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரை ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி காப்பாற்றியதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சதீஷ் குமார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவரிடம் அதிகாரியிடம் ஊழல் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினார்களாம். இதனால் மனம் உடைந்த அவர், தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தில் வியாழக்கிழமை பிற்பகல் தேர்வாணைய அலுவலகத்தில் உள்ள ஆவணங்கள் வைக்கும் அறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாராம்.
அலுவலக ஊழியர்கள், கதவைத் தட்டியபோதும் திறக்கவில்லை. இதையடுத்து ஊழியர்கள், அவரிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். சுமார் 3 மணி நேரம் அறையினுள் இருந்த அவரிடம் ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வெளியே வரவழைத்தனர். இந்த நிலையில், ஆயிரம்விளக்கு இன்ஸ்பெக்டர் குணவர்மன் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார்.












Click it and Unblock the Notifications