அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றம் தடை
மதுரை: தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் மீதான சொத்து குவிப்பு வழக்கை சிறப்பு நீதிமன்றம் விசாரிக்க மதுரை உயர் நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு தற்போதைய நிதியமைச்சர் ஓ. பன்னீர் செல்வம், அவருடைய மனைவி விஜயலட்சுமி, மகன் ரவீந்திரநாத், தம்பி ராஜா, அவருடைய மனைவி சசிகலாவதி, மற்றொரு தம்பி பாலமுருகன், அவருடைய மனைவி லதா மகேஸ்வரி ஆகியோர் மிது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மதுரையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசராணைக்கு வந்ததது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றம்சாட்டபப்ட்ட அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் வரும் 28ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேர் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், "சொத்துகுவிப்பு வழக்கை வேறு ஒரு சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். அதுவரை கீழ் நீதிமன்ற விசராணைக்கு தடைவிதிக்க வேண்டும். வரும் 28ம் தேதி கீழ் நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்தும் விலக்கு அளிக்க வேண்டும்," என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி வி.பெரியகருப்பையா முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த அவர் கீழ் நீதிமன்ற விசாரணைக்கு தடைவிதித்ததுடன், வரும் 28ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்தும் பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 பேருக்கு விலக்கு அளித்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications