For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரெஸ்ட் எடுக்க 30ம் தேதி கொடநாடு செல்கிறார் ஜெயலலிதா - தற்காலிக அலுவலகம் தயார்!

By Siva
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: முதல்வர் ஜெயலலிதா ஓய்வு எடுப்பதற்காக கொடநாடு எஸ்டேட்டிற்கு வரும் 30 தேதி செல்கிறார். அவர் அங்கு சில வாரங்கள் தங்கியிருப்பார். அங்கிருந்தபடியே முதல்வர் பணிகளை கவனிப்பார். இதற்கென தற்காலிக முதல்வர் அலுவலகமும் தயாராகிறது.

முதல்வர் ஜெயலலிதா தன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த வாரம் 2 நாட்கள் பெங்களூர் நீதிமன்றத்தில் ஆஜராகி அத்தனை கேள்விகளுக்கும் பதில் அளித்தார். அந்த விசாரணை முடிந்துவிட்ட நிலையில் அவர் ஓய்வு எடுப்பதற்காக வரும் 30 தேதி கொடநாடு செல்கிறார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முதல்வர் ஜெயலலிதா வரும் 30ம் தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு நீலகிரி மாவட்டம் கொடநாட்டுக்கு செல்கிறார். சில வார காலம் அங்கிருந்தபடியே அரசுப் பணிகளை மேற்கொள்வார்," என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. அமைச்சர்கள், அதிகாரிகள் நிவாரணப் பணிகளை சரிவர மேற்கொள்ளவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இன்னொரு பக்கம் கடும் விலைவாசி உயர்வால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஜெயலலிதா ஓய்வுக்காக கொடநாடு கிளம்புவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
TN CM Jayalalithaa is leaving for Kodanadu on november 30 to take rest. She will carry out government duties from there itself.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X