3 கிராம பஞ்சாயத்து உறுப்பினர் தேர்தல்- இன்று வாக்கு எண்ணிக்கை
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் 3 கிராம பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு இன்று (29ம் தேதி) வாக்குகள் எண்ணப்படுகிறது.
வள்ளியூர் பஞ்சாய்தது யூனியன், வேப்பிலான்குளம் கிராம பஞ்சாய்தது 1,5,8 ஆகிய வார்டுகளுக்கு உறுப்பினர் தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 10 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 76 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த கிராம பஞ்சாயத்து, வார்டு உறுப்பினர்களுக்குரிய வாக்கு எண்ணிக்கை வள்ளியூர் பஞ்சாய்தது யூனியன் அலுவலகத்தில் இன்று (29ம் தேதி) நடக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் 8 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஒரு பஞ்சாயத்து யூனியனில் நாளை (30ம் தேதி) துணைத் தலைவர் தேர்தல் நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் உள்ளாட்சி பிரநிதிகளுக்கு மறைமுக தேர்தல் நாளை (30ம் தேதி) நடக்கிறது. மாவட்டத்தில் ஆலங்குளம் பஞ்சாயத்து யூனியன் ஊத்துமலை, சேரன்மகாதேவி பஞ்சாயத்து யூனியன் வெங்கட்ரங்கபுரம், கடையம் யூனியன் கடையம், கடையநல்லூர் யூனியன் குலையநேரி, நான்குநேரி யூனியன் பூலம், ராதாபுரம் யூனியன் சமூகரங்கபுரம், வாசுதேவநல்லூர் யூனியன் உள்ளார் தளவாய்புரம், கோட்டையூர் ஆகிய 8 கிராம பஞ்சாயத்து துணைத் தலைவர் தேர்தல் நாளை (30ம் தேதி) நடக்கிறது.
மேலும், சேரன்மகாதேவி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் தேர்தலும் நாளை (30ம் தேதி) நடத்தப்படுகிறது. இத்தேர்தல் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications