நில அபகரிப்பு வழக்கு- முன்ஜாமீன் கோரி உதயநிதி ஸ்டாலின் உள்பட 5 பேர் மனு- ஸ்டாலின் கோரவில்லை
சென்னை: சென்னை காவல்துறை தொடர்ந்துள்ள நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 5 பேர் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
குமார் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட 6 பேர் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கொலை மிரட்டல், சொத்து அபகரிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தப் புகார்களை ஸ்டாலின் இன்று டிஜிபி அலுவலகத்திற்கே சென்று மறுத்துள்ளார். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின், வேணுகோபால் ரெட்டி, சுப்பா ரெட்டி, ராஜா சங்கர், சீனவாசன் ஆகிய மற்ற ஐவரும் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மனு செய்தனர்.
இந்த வழக்கை தான் சட்டப்படி சந்திக்கப் போவதாக மு.க.ஸ்டாலின் கூறி விட்டதால் அவர் சார்பில் முன்ஜாமீன் கோரப்படவில்லை.












Click it and Unblock the Notifications