முல்லைப் பெரியாறு நீர் வரும் மதகை உடைத்து கேரள காங். ரகளை- யுவராஜா எச்சரிக்கை
சென்னை: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் வரும் மதகின் கேட்டை உடைத்து கேரள காங்கிரஸ் கட்சியினர் ரவுடித்தனம் செய்துள்ளனர். இதற்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
புதிய அணை கட்டும் கோரிக்கையை வலியுறுத்தி, அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகு பகுதியில் போராட்டம் நடத்தப்படும் என்று கேரள மாநில இளைஞர் காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அணை பலவீனமாக இருப்பதால் அணையில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் தண்ணீரின் அளவை அதிகரிக்கும் வகையில் மதகுகளை திறந்துவிடப் போவதாகவும், அதனால் அணையில் உள்ள தண்ணீரின் நீர்மட்டம் குறையும் என்றும், அதன் காரணமாக அணை தொடர்ந்து பாதுகாப்பான நிலையில் இருக்கும் என்றும் இளைஞர் காங்கிரசார் போராட்ட அறிவிப்பின்போது பிரசாரம் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கேரள மாநில இளைஞர் காங்கிரசார் வட்டார செயலாளர் ரோபி என்பவரது தலைமையில் நேற்று முன்தினம் முல்லை பெரியாறு அணை தமிழக மதகு பகுதிக்கு செல்வதற்காக தேக்கடி நுழைவுவாயில் அருகே குவிந்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட காங்கிரசார் அங்கு திரண்டு வந்து தேக்கடி நுழைவுவாயில் பகுதியில் முற்றுகையிட்டனர். ஆனால் அங்கு வெறும் 25 போலீஸாரே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
தேக்கடி நுழைவு வாயில் பகுதியில் உள்ள இரும்பு கிரில் கேட்டில் சிலர் ஏறி குதித்தனர். அப்போது அங்கு பணியில் இருந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் சிலரை தடுத்து நிறுத்தினார். இதையடுத்து போலீஸார் மீது காங்கிரஸார் ரவுடித்தனமாக தாக்கத் தொடங்கினர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் மற்றும் போலீசார் சுதாகரன், விதினசந்திரன், ஜெயதேவன் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சசிதரன் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டது.
அதற்குள் காங்கிரசார் கும்பலாக தேக்கடி நுழைவுவாயில் கதவை திறந்துவிட்டு முல்லை பெரியாறு அணையின் தமிழக மதகு பகுதிக்கு ஓடினார்கள். அங்கிருந்த சிறிய கிரில் கேட்டையும் உடைத்துவிட்டு மதகு பகுதிக்கு விறுவிறுவென ஏறிச்சென்றனர்.
பின்னர் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படும் மதகுகளின் மேல் 10-க்கும் மேற்பட்டோர் ஏறி காங்கிரஸ் கொடியை நாட்டினர். மற்றவர்கள் மதகுகளின் அருகே திரண்டு நின்றனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
தமிழக இளைஞர் காங். கண்டனம்
கேரள காங்கிரஸ் கட்சியினரின் இந்த செயலுக்கு தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தேக்கடியில் நடந்துள்ள சம்பவம் கடும் கண்டனத்துக்குரியது. கேரள காங்கிரஸாரின் செயலுக்கு தமிழக இளைஞர் காங்கிரஸார் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் போலீஸ் படையிடம் ஒப்படைக்க வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ள பேச்சுவார்த்தையில் தமிழக அரசும் பங்கேற்க வேண்டும் என்றார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications