முல்லைப் பெரியாறு விவகாரம்: மத்திய அரசு இரட்டை வேடம்- நாஞ்சில் சம்பத்
திருவட்டார்: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
இது குறி்த்து நாஞ்சித் சம்பத் திருவட்டாரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தற்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முல்லைப் பெரியாறு அணை கட்டி 100 ஆண்டுகளை கடந்ததால் அங்கு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு கூறுகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகின்றது.
முல்லைப் பெரியாறு அணை ஆய்வக என்ஜினியர்கள் டெல்லியில் ஒரே மேடையில் விவாதிக்க தயாராக உள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரம் அணை விவகாரம் குறித்து நாளை(7ம் தேதி) முதல் உண்ணாவிரதம், சாலை மறியல் மற்றும் பிரசாரங்கள் நடைபெறும்.
தமிழ்நாட்டில் இருந்து தான் கேரளாவிற்கு இறைச்சி, பால், துணி, காய்கறி, அரிசி உள்ளிட்ட 90 சதவீத பொருட்கள் செல்கிறது. இவைகளை நிறுத்த வரும் 31ம் தேதி முற்றுகை, உறவு துண்டிப்பு போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications