முல்லைப் பெரியாறு குறித்து பிரதமரைச் சந்தித்த ஏ.கே.அந்தோணி- கேரளா மறைமுக நெருக்குதல்?

Subscribe to Oneindia Tamil

Manmohan Singh and AK Antony
டெல்லி: மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணி இன்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்து முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்துப் பேசியுள்ளார். அந்தோணி மூலம் கேரள அரசு பிரதமருக்கு மறைமுக நெருக்குதல் கொடுக்கிறதோ என்ற சந்தேகம் இதன் மூலம் எழுந்துள்ளது.

முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக இதுவரை மத்திய அரசிடமிருந்து பெரிய அளவில் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதுவும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி, ப.சிதம்பரம், பவன் குமார் பன்சால் ஆகியோருடன் சமீபத்தில் பிரதமர் ஆலோசனை நடத்தினார்.

அதேசமயம், பிரதமரை, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, எம்.பிக்கள் உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர். தமிழக முதல்வர் இதுவரை பிரதமரை நேரில் சந்திக்கவில்லை. மாறாக அதிமுக எம்.பிக்கள் சந்திததுப் பேசினர். அதேபோல திமுக எம்.பிக்களும் சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரும், கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே.அந்தோணி இன்று திடீரென பிரதமரைச் சந்தித்துப் பேசினார். முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக அவர் பிரதமரைச் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை அந்தோணி இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிடாமல் இருந்து வருகிறார். இதனால் கேரளாவில் அவருக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில்தான் அந்தோணி, பிரதமர் சந்திப்பு நடந்துள்ளது.

கேரள அரசின் நெருக்குதல் காரணமாக அந்தோணி, பிரதமரைச் சந்தித்தாரா என்பது தெரியவில்லை. இருப்பினும், இந்தப் பிரச்சினையில் பிரதமர் நேரடியாக தலையிட வேண்டும் என்று மன்மோகன் சிங்கை, அந்தோணி வலியுறுத்தியதாக தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+