இலங்கை சிறையில் உள்ள 5 தமிழக மீனவர்களின் வழக்குச் செலவுகளை அரசே ஏற்கும் – ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஐந்து தமிழக மீனவர்களின் வழக்குச் செலவுகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில், மீனவர்களை விடுவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர், இதனை அவர் அறிவித்தார்.

ரமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்களான எமர்சன், அகஸ்டஸ், லேங்க்லெட், பிரசாத் மற்றும் வில்சன் ஆகிய 5 பேரை கடந்த 28-ந் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். டிசம்பர் 5-ந் தேதி அவர்கள் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கு வரும் 19-ந் தேதி மேல் விசாரணைக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமையன்று தலைமைச் செயலகத்தில், மீனவர்களை விடுவிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.

அப்போது இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் வழக்கு செலவுகளை ஏற்பது என்று முடிவு செய்யப்பட்டது. அப்பாவி மீனவர்களை விடுவிப்பதற்கான கூட்டமைப்பு மூலம் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+