டெல்லியில் கடும் பனிமூட்டம் – அடுத்தடுத்து 10 கார் மோதி விபத்து
டெல்லி: டெல்லியில் அதிகாலை நேரத்தில் நிலவிய கடும் பனி மூட்டத்தினால் டெல்லி-நொய்டா எக்ஸ்பிரஸ் சாலையில் பழுதாகி நின்றுகொண்டிருந்த கண்டெய்னர் லாரி மீது அடுத்தடுத்து 10 கார்கள் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது. இதனால் நொய்டா எக்ஸ் பிரஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உத்தரபிரதேசம், பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒருவாரகாலமாக கடும் பனி கொட்டிவருகிறது. டெல்லியில் இன்று காலை தட்பவெட்பநிலை 4.8 டிகிரி செல்சியசாக இருந்தது. இன்று காலையில் விடிந்த பின்னரும் சாலை தெளிவாக தெரியாதபடி நீண்ட நேரம் புகை கண்ணை மறைத்ததால் படேல் நகர், காஜிபூர், சரை கலேகான், நிஜாமுதீன் பகுதி களில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டிருந்தது. ஆனால் விமான சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
10 கார்கள் அடுத்தடுத்து மோதல்
இதற்கிடையே இன்று அதிகாலை 4.30 மணிக்கு டெல்லி-நொய்டா எக்ஸ் பிரஸ் சாலையில் ஒரு கண்டெய்னர் லாரி பழுதாகி சாலை நடுவே நின்று விட்டது. லாரி நிற்பது கடும் பனி புகை மூட்டத்தில் தெரியவில்லை. இதனால் அந்த கண்டெய்னர் லாரி மீது வேகமாக வந்த ஒரு கார் மோதியது. அடுத்தடுத்து 10 கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி பெரிய விபத்து ஏற்பட்டது. இதனால் நொய்டா எக்ஸ் பிரஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் வாகனங்கள் அகற்றப்பட்டபின்னர் போக்குவரத்து சீரடைந்தது. வட இந்திய மாநிலங்களில் கடும் குளிரை தாக்குபிடிக்க முடியாமல் இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications