முல்லைப் பெரியாறு: 'கேரள ஜால்ரா' டி.கே.பாலை நீக்குமாறு சோனியாவிடம் திமுக கோரிக்கை
டெல்லி: முல்லைப் பெரியாறு அணைக்கு சுமுகத் தீர்வு காணக் கோரி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் திமுக எம்.பிக்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர். பாலு தலைமையில், அக்கட்சியின் எம்.பிக்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினர். பின்னர் அவர்கள் சோனியா காந்தியையும் சந்தித்துப் பேசினர்.
இச் சந்திப்பு குறித்து திமுக எம்பி டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், கேரள மாநிலத்துக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள் தாக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். கேரளத்தில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குழுவில் இடம் பெற்றுள்ள டி.கே. பால் என்பவரை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் குழுவில் இருந்து நீக்க வேண்டும். ஐ.ஐ.டி. ரூர்க்கி சார்பில் "அணை பலமாக இல்லை' என்று அவர் அறிக்கை தாக்கல் செய்தவர் என்று பிரதமரிடம் கூறினோம்.
இது தொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் உறுதியளித்தார்.
இதே கோரிக்கைகள் குறித்து, சோனியா காந்தியிடமும் வலியுறுத்தினோம். பிரதமருடன் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சோனியா காந்தி தெரிவித்தார் என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications