பேச்சுவார்த்தை அழைப்புக்கு தமிழகம் மதிப்பு தரவில்லை- உம்மன் சாண்டி பேச்சு
Subscribe to Oneindia Tamil

ஆலப்புழாவில் "பொதுமக்களுடனான நேரடிச் சந்திப்பு' என்ற நிகழ்ச்சியில் பேசிய உம்மன்சாண்டி,
முல்லைப்பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தை கேரளம் சுமுகமாகவும், பேச்சுவார்த்தையின் மூலமும் தீர்த்துக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார்.
அணை விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த கேரளம் விடுத்த அழைப்புக்கு தமிழகம் உரிய வகையில் மதிப்பளிக்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா கூடங்குளம் அணு உலைத் திட்டத்தை பாதுகாப்புக் காரணத்துக்காக எதிர்க்கிறார். ஆனால் முல்லைப்பெரியாறு அணையினால் கேரளத்துக்கு ஏற்படவுள்ள ஆபத்துக்கு அதே அளவுகோலை பயன்படுத்த மறுக்கிறார்'' என்றும் அவர் சொன்னார்.












Click it and Unblock the Notifications