For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கரூரில் 6 பேர் கொண்ட திருட்டு கும்பல் கைது - 17 கார்கள் பறிமுதல்

Google Oneindia Tamil News

கரூர்: கார் திருடும் கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் கரூரில் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 17 கார்கள், ரொக்க பணம் மற்றும் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கடந்த 22ம் தேதி இரவு கரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ், பசுபதிபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் மதுரை பைபாஸ் ரோடு மற்றும் கரூர் தெரசா கார்னர் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் வந்த காரை நிறுத்தி விசாரித்தனர்.

அந்த காரில் இருந்தவர்கள் முன்னுக்கு முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை கைது செய்து தகுந்த முறையி்ல் விசாரித்த போது கரூர், நாமக்கல், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கார்களை திருடியது தெரிய வந்தது.

மேலும் போலீசாரிடம் சிக்கியவர்கள், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சுரேஷ்(34) புதுக்கோட்டையை சேர்ந்த ராஜாமணி(34), திருச்சி எடமலைபட்டிபுதூர் பகுதியை சேர்ந்த சசிகுமார்(20), திருச்சி ஜீவா நகரை சேர்ந்த ஜாபர்(24), உய்யகொண்டான் பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன்(24) உறையூரை சேர்ந்த சாகுல் அமீது(34) என்று தெரிய வந்தது.

குற்றவாளிகள் கொடுத்த தகவலின் பேரில் பொலிரோ, இன்னோவோ, இண்டிகா, ஆம்னிவேன் ,ஸ்கார்பியோ, குவாலிஸ், மகேந்திரா, லோகன் உள்ளிட்ட வகைகளை சேர்ந்த 17 கார்களை

English summary
Karur police has arrested 6 person gang in the connection with car theft. Police seized 17 cars from the gang.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X