தானே புயல் எதிரொலி- தென் மாவட்ட ரயில்கள் தாமதம்- சில ரயி்ல்கள் ரத்து
சென்னை: தானே புயல் எதிரொலியாக தென் மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வந்த பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
2 மணி நேரம் தாமதமாக பல ரயில்கள் வந்து கொண்டுள்ளன. முத்துநகர், மங்களூர், பொதிகை, கன்னியாகுமரி, நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்கள் சென்னைக்கு தாமதமாக வந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து திருச்சி செல்ல வேண்டிய சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கன மழை மற்றும் சூறாவளிக் காற்று காரணமாக ரயில் ரத்து செய்யப்படுகிறது.
புதுவையிலிருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்தாகியுள்ளது. சென்னை புதுச்சேரி பயணிகள் ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் புதுச்சேரி செல்லாமல் மீண்டும் சென்னைக்கேத் திரும்புகிறது.
ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலும் கன மழை காரணமாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
மன்னார்குடியில் இருந்து நீடாமங்கலம், தஞ்சாவூர் வழியாக சென்னை செல்லும் ரெயிலும், காரைக்குடியில் இருந்து சென்னை செல்லும் ரயிலும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விருதாச்சலம், விழுப்புரம் மெயின் லைன் வழியாக இயக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications