For Daily Alerts
Just In
புயல் பாதித்த பகுதிகளை நாளை ஹெலிகாப்டரில் இருந்தபடி பார்வையிடுகிறார் ஜெ.
தானே புயலால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் மிகப் பெரிய சீரழிழை சந்தித்துள்ளன. விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின்சாரமே இல்லை, பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குப் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் புயல் சேத நிலவரத்தைப் பார்வையிட முதல்வர் ஜெயலலிதா நாளை செல்கிறார். நாளை பிற்பகல் கடலூருக்கு செல்லும் அவர் ஹெலிகாப்டரில் இருந்தபடி புயல் பாதித்த பகுதிகளை பார்வையிடுகிறார். கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் புயல் பாதித்த அனைத்துப் பகுதிகளிலும் அவர் ஹெலிகாப்டரில் பறந்தபடி ஆய்வு செய்யவுள்ளார்.
மேலும் நிவாரணப் பணிகளையும் அவர் ஆய்வு செய்யவுள்ளார்.
Comments
English summary
Chief Minister Jayalalitha to hold aerial survey in Cyclone affected areas in Cuddaloreand Villupuram districts tomorrow.
Story first published: Tuesday, January 3, 2012, 18:13 [IST]