மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகளை தடை செய்ய வேண்டும்: ஜெயலலிதாவுக்கு யுவராஜா கோரிக்கை
தஞ்சாவூர்: தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வரும் மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளை தடை செய்ய முதல்வர் ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
தஞ்சாவூரில் இளைஞர் காங்கிரஸ் மாநில நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட யுவராஜா பேசியதாவது,
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் உச்ச நீதிமன்ற தீர்ப்பும், நிபுணர் குழுவின் அறிவிப்பும் தமிழகத்துக்கு சாதகமாக உள்ளது. இப்பிரச்னையில் தமிழகத்துக்கு தான் இறுதி வெற்றி கிடைக்கும். எனவே, தமிழர்கள் அமைதி காக்க வேண்டும்.
தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் மதிமுக, பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற சிறிய கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. எனவே, இக்கட்சிகளை தடை செய்ய முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மின்தடையால் தொழில்துறை, விவசாயம், மாணவர்களின் கல்வி ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. மின்வெட்டு நேரமும் அதிகரித்துக் கொண்டே போகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்தினால் தான் தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சனை தீரும். கூடங்குளம் பிரச்னையை உதயகுமார் தான் வெளிநாட்டு சதிகளின் பின்னணியில் பெரிதுபடுத்தி வருகிறார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.
கருணாநிதி குடும்ப ஆட்சி நடத்தினார். தற்போது அதிகாரிகளின் ஆட்சி நடக்கிறது. தமிழக அமைச்சர்கள் அதிகாரம் இழந்து வருகின்றனர்.
தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் மாவட்டத்தில் ஒரு சில மணித்துளிகள் மட்டுமே முதல்வர் செலவழித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் சந்தித்து முதல்வர் ஆறுதல் கூறாதது வேதனை அளிக்கிறது. புயல் பாதித்தப் பகுதிகளில் நிவாரண உதவிகளை மட்டும் வழங்காமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் வகையில் நிரந்தர திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications