சங்கரன்கோவிலுக்கு பிப்ரவரியில் இடைத் தேர்தல்?
டெல்லி: சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதிக்கு வருகிற பிப்ரவரி மாதத்தில் இடைத் தேர்தல் நடத்தப்படக் கூடும் என்று டெல்லி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சங்கரன்கோவில் தொகுதியில் கடந்த பொதுத் தேர்தலின்போது அதிமுகவைச் சேர்ந்த கருப்பசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் அவர் அமைச்சராகவும் உயர்ந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கருப்பசாமி புற்று நோய் தாக்கி மரணமடைந்தார். இதையடுத்து தொகுதி காலியாகியுள்ளது.
இந்தத் தொகுதிக்கு ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்தக் காலக் கெடு ஏப்ரல் 21ம் தேதி முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இருப்பினும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் பொதுத்தேர்வுகள், பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என்பதால் அந்த இருமாதங்களிலும் தேர்தல் நடத்தும் வாய்ப்பில்லை என்பதால்,யாருக்கும் பாதகமில்லாத பிப்ரவரியில் இடைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது












Click it and Unblock the Notifications