கனிமொழியுடன் கிராமியக் கலைஞர்கள் சந்திப்பு – பொங்கல் வாழ்த்து
சென்னை : நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை கிராமிய கலைஞர்கள் சிலர் சென்னையில் சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சங்கமம் நிகழ்ச்சியின் மூலம் ஐந்து ஆண்டுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள கிராமிய கலைஞர்களை சென்னைக்கு வரவழைத்தவர் கனிமொழி. திமுக ஆட்சி காலத்தில் 5 ஆண்டுகளும் தை திருநாளை ஒட்டி சங்கமம் எனப்படும் நாட்டுபுற கலைநிகழ்ச்சிகளை நடத்தப்பட்டன. சென்னை தமிழ்மையம் அமைப்புடன் இணைந்து கனிமொழி நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு பெரும் வரவேற்பு கிடைத்து.
ஆட்சி மாற்றம் மற்றும் 2ஜி வழக்கில் கனிமொழி சிறைக்கு சென்றதை அடுத்து சங்கமம் நிகழ்ச்சி இந்த ஆண்டு நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதனிடையே ஜாமீனில் வெளி வந்துள்ள கனிமொழிக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சென்னையில் தங்கியுள்ளார்.
கலைஞர்கள் சந்திப்பு
கிராமங்களில் இருந்து வந்த நாட்டுப்புற கலைஞர்கள் கனிமொழியை சந்தித்து பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
சென்னை சங்கமம் நிகழ்ச்சிகள் மூலம் கிராமியக் கலைஞர்களுக்கு உதவி புரிந்து வந்தமைக்காக அவர்கள் கனிமொழிக்கு நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications