காணும் பொங்கல்: கறி விலை உயர்வு- கிலோ ரூ.450
நெல்லை: நெல்லையில் காணும் பொங்கலையொட்டி இன்று கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த புதுநெல் மற்றும் காய்கறிகளை சூரியனுக்கு படைத்து வணங்கி மகிழ்ந்தனர். இன்று காணும் பொங்கலையொட்டி வீடுகளில் உணவு சமைத்து அதை சுற்றுலாத் தலங்களுக்கு எடுத்து சென்று சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
பாபநாசம், களக்காடு, தலையணை, மணிமுத்தாறு, மாஞ்சோலை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதேபோல் கொக்கிரகுளம் அறிவியல் மையம், கிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது. காணும் பொங்கலை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே கறிக்கடைகளில் கூட்டம் அலைமோதியது. சாலையோரங்களில் ஏராளமான புதுக்கடைகளும் முளைந்திருந்தன. நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் கறி விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ஆட்டுக்கறி ரூ.400 முதல் ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது.
தனிக்கறி ரூ.450க்கும், எலும்புக் கறி ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலப்பாளையத்தில் எலும்புக் கறி ரூ.360க்கும், தனிக்கறி ரூ.400க்கும் விற்பனை செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications