ராஜபக்சே அச்சமின்றி வாழ உதவும் காங்கிரஸ்-திமுக: பழ. நெடுமாறன்
தஞ்சாவூர்: தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் இருந்தும் ராஜபக்சே பயமில்லாமல் இருப்பதற்குக் காரணம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசும், அதற்கு வால் பிடிக்கும் திமுகவும் தான் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ. நெடுமாறன் கூறினார்.
சசிகலாவின் கணவர் ம.நடராஜன் நடத்தும் நடராஜன் மருதப்பா அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடந்த தமிழர் கலை இலக்கிய விழாவில் பங்கேற்று நெடுமாறன் பேசுகையில்,
இலங்கையில் ஒரு கோடி சிங்களர்கள் வாழ்கின்றனர். ஈழப் போருக்கு முன்னதாக அங்கு 45 லட்சம் தமிழர்கள் வாழ்ந்தனர். அவர்களில் 3 லட்சம் பேர் போரில் கொல்லப்பட்டுவிட்டனர். 5 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இன்னும் 5 லட்சம் தமிழர்கள் இலங்கையின் வட கிழக்குப் பகுதிகளிலேயே அகதிகளாக, சிங்களர்களின் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
இப்போது ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்கள் குடிபெயர்ந்து, அங்கிருந்த தமிழ் அடையாளங்களை அழித்து வருகின்றனர்.
ஈழத்திலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் உள்ளனர். இருந்தும், ஈழப் போருக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புகள், போராட்டங்கள் குறித்து ராஜபக்சேவுக்கு பயம் வரவில்லை.
இதற்குக் காரணம் இந்திய அரசும், அதற்கு வால்பிடித்து வந்த முந்தைய திமுக அரசும்தான். மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு எதிரானது.
தமிழர்களின் குரல்களை இந்திய அரசு மதிக்காததற்கும், அன்றைய திமுக அரசுதான் காரணம். தமிழர்கள் வரலாற்றில் மாறாத அவமானக் கறையாக இந்த நிகழ்வுகள் அமைந்துவிட்டன.
இந்தக் கறையைத் துடைத்தெறிய, தமிழர்களுக்கு எதிரான அரசுகளையும், கட்சிகளையும் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும். மீண்டும் ஈழத்தில் தமிழ் விடுதலைப் போர் வெடிக்கும் என்றார் நெடுமாறன்.
-
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
15 ஆண்டுகளாக 1 சீட் கூட ஜெயிக்காத தேமுதிகவுக்கு 10 தொகுதிகளா? திமுக கூட்டணிக்குள் கொதிப்பு! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
2021ல் வென்ற தொகுதிகள் கூட அதிமுகவுக்கு கிடைக்காது.. சென்னையில் இன்னும் மோசம்.. சர்வேயில் அதிர்ச்சி -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
உடையும் திமுக காங்கிரஸ் கூட்டணி? தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் குழப்பம்! புதுச்சேரியில் பரபர -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே!











Click it and Unblock the Notifications