ஜனவரி 26ம் தேதி கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றுவோம்- அர்ஜூன் சம்பத் அறிவிப்பு
கரூர்: இந்து மக்கள் கட்சி சார்பில், கச்சத்தீவில் ஜனவரி 26 -ந் தேதி தேசியக் கொடி ஏற்றப்படும் என்று அர்ஜுன் சம்பத் அரிவித்துள்ளார்.
இது குறித்து கரூரில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
இந்து சமய பிரச்சார ஆன்மீக யாத்திரை 108 நாள்கள் நடைபெறும். இந்த யாத்திரை ஏப்ரல் 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்த நாளில் நிறைவடையும். யாத்திரையில் மதுவிலக்கு, சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு, ஊழல் எதிர்ப்பு இயக்க ஆதரவு, சுதேசி கொள்கை ஆகியவற்றை வலியுறுத்தி பிரசுரங்களை வழங்கி வருகிறோம்.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தக் கோரி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஜனவரி 25 ந் தேதி கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் நடத்த உள்ளோம்.
இந்தியாவின் ஒரு பகுதியான கச்சத்தீவில் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மத்திய அரசு சார்பில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். இல்லையனில், ஜனவரி 26 ந் தேதி கச்சத்தீவில் மாநிலச் செயலர் பவர்நாகேந்திரன் தலைமையில் தேசியக் கொடி ஏற்றுவோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications