நெல்லையில் ரூ.1.5 கோடி நிலம் மோசடி: 7 பேர் மீது வழக்கு
நெல்லை: நெல்லையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை மோசடி செய்த 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள மிட்டாதார் குளத்தைச் சேர்ந்தவர் மைக்கேல்ராஜ். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது அவருடன் வேலை பார்த்த கேரளாவைச் சேர்ந்த மயின்குட்டி மற்றும் 5 பேர் சேர்ந்து கருங்குளத்தில் 18 அரை ஏக்கர் நிலத்தை வாங்கினார்கள். இந்த நிலத்தை கேரள நண்பர்களுக்கு தெரியாமல் அவர்கள் பெயரில் போலி கையெழுத்து போட்டு தனது மனைவிக்கு மைக்கேல்ராஜ் பவர் பத்திரம் எழுதிக் கொடுத்துள்ளார்.
பின்னர் இந்த நிலத்தை கேரளாவைச் சேர்ந்த மற்றொருவருக்கு விற்பனை செய்துவிட்டார். இந்த நிலத்தின் தற்போதைய மதிப்பு ரூ.1.5 கோடி ஆகும். வெளிநாட்டில் இருந்து திரும்பிய மயின்குட்டியும், அவர்களது நண்பர்களும் கோட்டை கருங்குளத்தில் தாங்கள் வாங்கிய நிலத்தை சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த நிலத்தை வேறொருவர் அனுபவித்து வந்தது தெரிய வந்தது. மேலும் மைக்கேல்ராஜும் தற்போது இறந்துவிட்டார் என்று அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மயின்குட்டி நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயேந்திர பிதாரியிடம் புகார் செய்தார். மேலும் நீதிமன்றத்திலும் வழக்குப் பதிவு செய்ய மனு அளித்தார். இதையடுத்து நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மைக்கேல் ராஜ், அவரது மனைவி இந்திரா, ஜார்ஜ், இந்திரா கோபாலகிருஷ்ணன், சங்கரலிங்கம், கோபாலகிருஷ்ணன், மெகுஷா பானு ஆகிய 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications