உங்களுக்காக கேரளாவைப் பகைக்க முடியாது-தமிழக இளைஞர் காங். பொறுப்பாளரின் 'பொறுப்பான' பேச்சு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட மேலிட பொறுப்பாளரும், கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான லிஜூ, முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் அதில் நான் பங்கேற்க மாட்டேன். உங்களுக்காக எங்களது மாநிலத்தை நான் பகைத்துக் கொள்ள முடியாது என்று கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது. இருப்பினும் லிஜூ பேசியதை அமைதியாக ஏற்றுக் கொண்டனர் தமிழக இளைஞர் காங்கிரஸார்.

தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக கட்சி மேலிடம் கேரளாவைச் சேர்ந்தவரான அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் லிஜூவை நியமித்துள்ளது. இதற்கு தமிழக இளைஞர் காங்கிரஸார் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. இருப்பினும் அதை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்று நடந்த இளைஞர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் லிஜு கலந்து கொண்டார். அவரை மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உள்ளிட்டோர் சிறப்பாக வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் சத்தியமூர்த்தி பவனில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் லிஜு கலந்து கொண்டார். அதன் பிறகு வழக்கம் போல சத்தம், அமளி, துமளிகள், குற்றங்கள், கூப்பாடுகளுடன் கூட்டம் நடந்தது.

கூட்டத்தின் இடையே ஒரு நிர்வாகி எழுந்து, கூடங்குளம் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்துப் பேசினார். முல்லைப் பெரியாறு அணை குறித்த போராட்டத்தை இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு லிஜு தலைமை தாங்க வேண்டும் என்றார்.

அதைக் கேட்டதும் சட்டென்று எழுந்த லிஜு,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உங்கள் நிலைப்பாடு போராட்டமாக இருந்தால், அதை நடத்துங்கள். ஆனால் போராட்டத்திற்கு நான் தலைமை வகிக்க முடியாது. அது, கேரள மாநில அரசியலில் எனக்கு சிக்கலை ஏற்படுத்திவிடும் என்றார்.

இப்படியாக கூட்டம் முடிந்தது. கூட்டத்தில் ஆக்கப்பூர்வமாக எதுவும் பேசப்படவில்லை, முடிவு செய்யப்படவில்லை, ஒரு தீர்மானம் கூட போடப்படவில்லை. மாறாக, ஒருவர் மாற்றி ஒருவர் மற்றவர்கள் மீ்து குற்றம் சாட்டியபடியே இருந்தனர்.

'பிங்கர் ஆன் தி லிப்ஸ்'

இடையில் சத்தம் அதிகமானது. அப்போது பள்ளிக்கூடங்களில் வகுப்புகளில் மாணவர்கள் கய்யா முய்யாவென்று சத்தம் போடும்போது கையில் குச்சியுடன் ஹெட்மாஸ்டர் வந்து சைலன்ஸ் என்று பேசி எச்சரித்து விட்டுச் செல்வாரே, அதேபோல மாநில தலைவர் ஞானதேசிகன் கூட்டம் நடந்த அரங்குக்குள் நுழைந்தார்.உள்ளே வந்தவர், சண்டை போடும் இடம் சத்தியமூர்த்திபவன் இல்லை. அய்யோ, குய்யோ வென்று என யாரும் கத்தி பேசக் கூடாது. அப்படி உங்கள் பிரச்னை பற்றி பேச வேண்டும் என்றால், வெளியே போய் பேசுங்கள். நான் ராகுலிடம் சொல்லி விடுவேன் என்று 'பிங்கர் ஆன் தி லிப்ஸ்' என்று டீச்சர்கள் சொல்வது போல கண்டிப்புடன் சொல்லி விட்டுப் போனார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+