ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களை நீக்கும் சிட்டி பேங்க், எச்எஸ்பிசி, பார்க்லேஸ் வங்கி

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிலவும் பொருளாதார பிரச்சனைகளால் பெரும் நிதித் தட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கிகள் உலகளவில் வேலைவாய்ப்புகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் பணியாளர்களை நீக்கவுள்ளன. சிட்டி பேங்க கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவில் 100 பணியாளர்களை நீக்கியது.
அடுத்ததாக எச்எஸ்பிசி உலகளவில் 3,000 பேரை நீக்கவுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்திய ஊழியர்கள் ஆவர்.
பிரான்ஸ் நாட்டு வங்கியான பிஎன்பி பரிபாஸ், ராயஸ் பேங்க் ஆப் ஸ்காட்லாண்ட் ஆகியவை தங்களது சில பிரிவுகளை ஒருங்கிணைத்து, இந்தியாவில் ஊழியர்களைக் குறைக்கவுள்ளன.
2011ம் ஆண்டில் பெரும்பாலான ஐரோப்பிய வங்கிகள் சுமார் 2 லட்சம் ஊழியர்களை நீக்கவுள்ளன. இதில் இந்திய ஊழியர்களையும் அவை விட்டு வைக்கவில்லை.
இந்தியாவில் இவை லாபகரமாக இயங்கினாலும் பிற நாடுகளில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக இந்திய ஊழியர்களை நீக்குவதை இந்த சர்வதேச நிதி நிறுவனங்களும் வங்கிகளும் ஒரு வாடிக்கையாகவே வைத்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கிகளின் யூஸ் அண்ட் த்ரோ பாலிஸியை முறியடிக்க சில முக்கிய திருத்தங்களை ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் வெறும் கிளைகளை மட்டும் தொடங்க முடியாது. அவை இந்திய பிரிவுகளாக மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் இந்திய வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இவை செயல்பட முடியும். தங்களது சர்வதேச விதிகளை இந்திய ஊழியர்கள் மீது திணிக்க முடியாது.
ஆனால், இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று அவை நடைமுறைக்கு வர வெகுகாலம் ஆகலாம். அல்லது, ஏராளமான முதலீட்டைக் கொண்டு வரும் இந்த வெளிநாட்டு நிறுவனங்களை பகைக்க விரும்பாவிட்டால் ரிசவ்ர் வங்கியின் இந்த பரிந்துரைகளையே மத்திய அரசு நிராகரிக்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications