ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களை நீக்கும் சிட்டி பேங்க், எச்எஸ்பிசி, பார்க்லேஸ் வங்கி

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் நிலவும் பொருளாதார பிரச்சனைகளால் பெரும் நிதித் தட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கிகள் உலகளவில் வேலைவாய்ப்புகளைக் குறைத்து லாபத்தை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக இந்தியாவிலும் பணியாளர்களை நீக்கவுள்ளன. சிட்டி பேங்க கடந்த செவ்வாய்க்கிழமை இந்தியாவில் 100 பணியாளர்களை நீக்கியது.
அடுத்ததாக எச்எஸ்பிசி உலகளவில் 3,000 பேரை நீக்கவுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானவர்கள் இந்திய ஊழியர்கள் ஆவர்.
பிரான்ஸ் நாட்டு வங்கியான பிஎன்பி பரிபாஸ், ராயஸ் பேங்க் ஆப் ஸ்காட்லாண்ட் ஆகியவை தங்களது சில பிரிவுகளை ஒருங்கிணைத்து, இந்தியாவில் ஊழியர்களைக் குறைக்கவுள்ளன.
2011ம் ஆண்டில் பெரும்பாலான ஐரோப்பிய வங்கிகள் சுமார் 2 லட்சம் ஊழியர்களை நீக்கவுள்ளன. இதில் இந்திய ஊழியர்களையும் அவை விட்டு வைக்கவில்லை.
இந்தியாவில் இவை லாபகரமாக இயங்கினாலும் பிற நாடுகளில் தாங்கள் சந்திக்கும் பிரச்சனைகளுக்காக இந்திய ஊழியர்களை நீக்குவதை இந்த சர்வதேச நிதி நிறுவனங்களும் வங்கிகளும் ஒரு வாடிக்கையாகவே வைத்துக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வங்கிகளின் யூஸ் அண்ட் த்ரோ பாலிஸியை முறியடிக்க சில முக்கிய திருத்தங்களை ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம் பரிந்துரைத்துள்ளது. அதன்படி வெளிநாட்டு வங்கிகள் இந்தியாவில் வெறும் கிளைகளை மட்டும் தொடங்க முடியாது. அவை இந்திய பிரிவுகளாக மாற்றப்பட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இதன்மூலம் இந்திய வங்கிகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே இவை செயல்பட முடியும். தங்களது சர்வதேச விதிகளை இந்திய ஊழியர்கள் மீது திணிக்க முடியாது.
ஆனால், இந்தப் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று அவை நடைமுறைக்கு வர வெகுகாலம் ஆகலாம். அல்லது, ஏராளமான முதலீட்டைக் கொண்டு வரும் இந்த வெளிநாட்டு நிறுவனங்களை பகைக்க விரும்பாவிட்டால் ரிசவ்ர் வங்கியின் இந்த பரிந்துரைகளையே மத்திய அரசு நிராகரிக்கலாம்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications