மின் கட்டண உயர்வு தொடர்பான கருத்து கேட்பு கூட்டம்: பொதுமக்கள் கடும் எதிர்ப்பு
சென்னை: தமிழ்நாடு மின்சார வாரியம் நடத்திய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் மின் கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை உள்பட 4 நகரங்களில் மக்களிடம் கருத்து கேட்கும் பணி நடக்கிறது.
சென்னையில் ராஜா அண்ணாமலை மன்றத்தில் பொதுமக்களிடம் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணைய உறுப்பினர்கள் வேணுகோபால், நாசல்சாமி ஆகியோர் இக்கூட்டத்துக்கு தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாய அமைப்பினர் தொழில் மற்றும் விவசாய சங்கத்தினர், பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
மொத்தம் 84 பேர் கருத்துகளை தெரிவிக்க தங்கள் பெயர்களை பதிவு செய்து இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவராக கருத்து சொல்ல அழைக்கப்பட்டனர். அவர்கள் பெரும்பாலானோர் மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று வலியுறுத்தி பேசினர்
மின்சார கட்டணத்தை உயர்த்தினால் ஏழை, நடுத்தர மக்கள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும் என்பது பொதுமக்கள் பெரும்பாலானோரின் கருத்தாக இருந்தது.












Click it and Unblock the Notifications