கலாம், ஹசாரே உட்பட 27 பேருக்கு ஜிண்டால் விருதுகள்

ஹசாரே
ஹசாரேவுக்கு கிராமப்புற வளர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்காக விருது வழங்கப்பட்டது.
இவ்விருதைப் பெற்ற அன்னா ஹசாரே செய்தியாளர்களிடம் கூறுகையில், நான் இப்போது ஆரோக்கியமாக இருக்கிறேன். மேலும், ஊழலுக்கு எதிராக எதிர்காலத்தில் நான் பேராட தயாராக உள்ளேன்.
என்னுடைய உடல் எடையில் 4 . 5 கிலோ எடையை நான் இழந்துள்ளேன். வரும் 2014 ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். என்றார்.
நன்கொடை
மேலும் தமக்கு கிடைத்த பரிசுத் தொகையான 25 லட்ச ரூபாயை தமது தலைமையிலான அறக்கட்டளை ஒன்றுக்கு நன்கொடையாக கொடுத்தார்.
கலாம், சந்தோஷ் ஹெக்டே
விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையில் சிறந்த பங்களித்ததற்க்காக அப்துல் கலாமுக்கும், லோக் ஆயுக்தாவாக இருந்து கர்நாடக மக்களின் வாழ்கையில் உண்மையான மாற்றத்தை கொண்டுவந்ததிற்க்காக ஹெக்டேக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
தமக்கு கிடைத்த ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை மூன்று தொண்டு நிறுவனங்களுக்கும் தான் பிறந்த ராமநாதபுர மாவட்ட பொது நூலகத்திற்கும் கலாம் நன்கொடையாக வழங்கினார்.
இதேபோல் ஹெக்டே, தமக்குக் கிடைத்த ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகையை மத்திய ராணுவ நல நிதிக்கு நன்கொடையாக வழங்கினார்.
எஸ்.ஆர். ஜிண்டால் அறக்கட்டளை அனைவருக்கும் கொடுத்துள்ள பரிசுத் தொகையின் மொத்த மதிப்பு ரூ. 7 கோடி.












Click it and Unblock the Notifications