கிங் பிஷர் விமான சேவைக்கான உரிமம் இடைநிறுத்தம் செய்யப்படும்: மத்திய அரசு எச்சரிக்கை

இது தொடர்பாக அவர் கூறியதாவது:
கிங் பிஷர் நிறுவனம் தமது ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமல் திணறி வருகிறது. நிதி நெருக்கடியில் கிங்பிஷர் தவிப்பதாக விமான சேவைகள் முகாமை எண்ணினாலோ அல்லது கூடுதல் கடன் வழங்க இந்திய விமான சேவைகள் அத்தாரிட்டி மறுத்துவிட்டாலோ அந்நிறுவனத்தின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.
விமானசேவையை அந்நிறுவனம் மூடிவிட்டால் பயணிகளுக்கும் ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். ஆனால் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வதால் அப்படி எதுவும் நிகழ்ந்துவிடாது.
உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்வது எனபது அந்நிறுவனம் தமது நெருக்கடியிலிருந்து மீண்டு தமது சேவையை மீண்டும் தொடங்குவதற்கான ஒரு வாய்ப்புதான் என்றார் அவர்.
நெருக்கடியில் கிங்பிஷர்
கிங்பிஷர் விமான சேவை கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. ஊழியர்களுக்கு 3 மாத காலமாக ஊதியம் வழங்கவில்லை.
மேலும் தமது விமானசேவைகளையும் திடீரென்று முன்னறிவிப்பின்றி அடிக்கடி நிறுத்தியும் விடுகிறது.
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகளை விற்க மத்திய அரசு அனுமதித்தால் தமது நிறுவனத்தின் நெருக்கடி தீர்ந்துவிடும் என்பது கிங்பிஷர் நிறுவனத்தின் கோரிக்கை.












Click it and Unblock the Notifications