அஸ்ஸாம் முதல்வரை துணை ஜனாதிபதியாக்க காங்கிரஸ் முடிவு?
டெல்லி: தற்போதைய குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. இந்நிலையில் துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு அசாம் மாநில முதல்வர் தருண் கோகாய் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
துணை குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்தல் நடைபெறும் போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் அசாம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக முதல்வராக பதவி வகித்து வரும் கோகாயை நிறுத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. மேலும் இது குறித்து கட்சி மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
தருண் கோகாய் தேர்ந்தெடுக்கப்பட்டால் வடகிழக்கு இந்தியாவில் இருந்து உயர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்நபர் என்ற பெருமையை பெறக்கூடும்.
அசாம் முதல்வர் கோகாய், ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். 1991-93-ம் ஆண்டுகளில் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான அமைச்சரவையில் தனிப்பொறுப்புடன் கூடிய உணவுத்துறை அமைச்சராக பதவி வகித்துள்ளார்.
2001-ம் ஆண்டு முதல் அசாம் மாநிலத்தி்ன் முதல்வராக பதவி வகித்துளளார் தொடர்ந்து 2006 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பொது தேர்தல்களில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக முதல்வராக இருக்கிறார்.
தற்போது துணை குடியரசுத் தலைவர் பதவி வகி்த்து வரும் ஹமீத் அன்சாரியின் பதவிக்காலம் ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதியுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications