பலாத்காரங்களை தடுக்க 'நைட் கிளப்'புகளை மூடுங்க: மமதா அதிரடி!

Subscribe to Oneindia Tamil

Mamata Banerjee
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள அனைத்து நைட் கிளப்புகளையும் இனி நள்ளிரவு 12 மணிக்கு மூடிவிட வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு மூடினால் மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் நடக்காது என்று அவர் கருதுகிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த மாதம் 5ம் தேதி நைட் கிளப்பில் இருந்து இரவு 1 மணிக்கும் மேல் கிளம்பிய 37வயது பெண்ணுக்கு சிலர் லிப்ட் கொடுத்து காரில் வைத்து பலாத்காரம் செய்தனர். இந்த சம்பவத்தையடுத்து தான் நைட் கிளப்புகளை சரியாக நள்ளிரவு 12 மணிக்கு மூட வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி உத்தரவிட்டுள்ளார். அவ்வாறு செய்வதன் மூலம் மாநிலத்தி்ல பலாத்கார சம்பவங்கள் நடக்காது என்று அவர் கருதுகிறார். ஆனால் மதமதாவின் இந்த உத்தரவால் நைட் கிளப் உரிமையாளர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் கடந்த மாதம் மட்டும் பள்ளி மாணவி, காது கேளாத பெண், விதவை உள்பட 6 பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இந்த புகார்கள் எல்லாம் தனது அரசுக்கு கெட்டப் பெயர் வாங்கிக் கொடுக்க செய்யப்படும் சதி என்று மமதா தெரிவித்தார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போவதற்கு இடதுசாரிகள் தான் காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அரசு மருத்துவமனைகளில் பல பச்சிளம் குழந்தைகள் இறந்த சம்பவங்களும் தனது அரசுக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுக்க இடது சாரிகள் செய்யும் முயற்சி என்று தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+