5 லட்சம் 'ஆதரவாளர்களைத்' தாண்டியது மோடியின் ட்விட்டர்!

கடந்த 2009ம் ஆண்டு ட்விட்டருக்குள் புகுந்தார் மோடி. தொடர்ந்து அதில் பல்வேறு செய்திகளை, கருத்துக்களை ட்விட் செய்து வருகிறார். இப்போது அவரது ஆதரவாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
இந்திய அரசியல்வாதிகளிலேயே அதிக அளவிலான ட்விட்டர் ஆதரவாளர்களை வைத்திருப்பது இப்போதைக்கு மோடி மட்டுமே.
அதை விட ஆச்சரியமானது என்னவென்றால், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளராகும் கனவுடன் களத்தில் நிற்கும் மிட் ரோம்னி, ரிக் சான்டோரம் ஆகியோரை விட மோடிக்கே அதிக அளவிலான ட்விட்டர் ஆதரவாளர்கள் உள்ளனர் என்பது.
4 லட்சம் ஆதரவாளர்கள் வந்தவுடனேயே சாதாரண மக்களுடனும் ட்விட்டர் மூலம் தொடர்பு கொள்ள ஆரம்பித்தார் மோடி. இதன் மூலம் சாமானிய மக்களும் கூட மோடியை எளிதில், நேரடியாக தொடர்பு கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. சாமானிய மக்கள் தரும் கருத்துக்கள், யோசனைகளை ஏற்று அதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளிக்கிறார் மோடி.
இந்த ஆண்டை குஜராத் அரசு, சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு பிறந்த ஆண்டையொட்டி இளைஞர் சக்தி ஆண்டாக கடைப்பிடிக்கிறது. இதையொட்டி இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் வகையிலான வாசகங்களை தினசரி ட்விட் செய்து வருகிறார் மோடி. அவை அனைத்துமே விவேகானந்தரின் அருள்மொழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம்தான் நரேந்திர மோடியின் இணையதளம் புதுப் பொலிவுடன் புழக்கத்திற்கு வந்தது. பல புதிய அம்சங்களுடன் இந்த இணையதளம் மக்களை வசீகரிக்க ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் மோடியின் ட்விட்டர் ஆதரவாளர்களின் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது.












Click it and Unblock the Notifications