சென்னை விமான நிலையத்தில் போலீஸ் அதிகாரி- வழக்கறிஞர் இடையே குஸ்தி
சென்னை: சென்னை விமான நிலையத்தில் டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவரைத் தாக்கியதாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார்.
டெல்லியை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி குல்ஷன் குமார். இவர் ஏர் இந்தியா விமானத்தில் செல்வதற்காக விமானநிலையத்தில் வரிசையில் நேற்று இரவு நின்று கொண்டிருந்தார். அப்போது டெல்லி செல்வதற்காக வந்த சென்னை வழக்கறிஞர் ரியாஸ் அகமது கனி, வரிசையில் நிற்காமல் சென்றுள்ளார்.
இதனை குல்ஷன் குமார் தடுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது மோதலில் முடிந்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய போலீஸார் டெல்லி ஐ.பி.எஸ். அதிகாரி குல்ஷனை விடுவித்தனர். பின்னர் அவர் டெல்லி செல்ல அனுமதிக்கப்பட்டார். ஆனால் சென்னை வழக்கறிஞர் ரியாஸ் அகமது கனியை கைது செய்தனர். சென்னை வழக்கறிஞர் கைது செய்யபட்டதைக் கண்டித்து சில வழக்கறிஞர்கள் விமான நிலைய காவல்நிலையம் முன்பாக சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்












Click it and Unblock the Notifications