சங்கரன்கோவில் இடைத்தேர்தல்: கொளுத்தும் வெயிலில் வாக்கு சேகரிக்கும் அரசியல் கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: இடைத்தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது சங்கரன்கோவிலில் அனல்பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒட்டு மொத்த தமிழகத்தையே சங்கரன்கோவில் இடைத்தேர்தல் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அமைச்சர்கள் அனைவரும் தலைமைச் செயலகத்தை விட்டுவி்ட்டு சங்கரன்கோவிலில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அமைச்சர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் மக்கள் தேடிப் போன அவல நிலை இருந்த தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் மூலம் அவர்கள் மக்களை தேடி ஒடி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அக்னி வெயில் கந்தக பூமியி்ல் அனல் பறக்க சங்கரன்கோவி்ல் தொகுதியில் அதிமுக, மதிமுக, திமுக, தேமுதிகவினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சங்கரன்கோவில் தொகுதிக்கு உட்பட்ட ஒன்றிய பகுதிகளில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும், நகராட்சி பகுதியில் மதிமுக வேட்பாளர் சதன் திரு்மலைகுமாரும், அதி்முக வேட்பாளர் முத்துசெல்விக்கு ஆதரவாக அதிமுக தொண்டர்கள் உடலில் எம்ஜிஆர், முதல்வர் ஜெயலலிதா இரட்டை இலை சின்னம் வரைந்து அனல் பறக்கும் வெயிலில் அனைத்து தரப்பினரிடமும் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர்.

தேமுதிக வேட்பாளர் முத்துகுமாருக்கு ஆதரவாக விஜயகாந்தின் மைந்துனரும், தேமுதிகவின் மாநில இளைஞரணி செயலாளருமான சுதீஷ் பனவடலிசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+