நிலமோசடி வழக்கில் குடும்பத்தினருடன் எடியூரப்பா நீதிமன்றத்தில் ஆஜர்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நிலமோசடி வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தமது குடும்பத்தினருடன் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜரானார்.

எடியூரப்பா மற்றும் அவரது 2 மகன்கள், மருமகன், முன்னாள் வீட்டு வசதி துறை அமைச்சர் கிருஷ்ணய்யா ஆகியோர் மீது லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நிலமோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தொடங்கிய இவ்வழக்கு மீதான விசாரணைக்கு எடியூரப்பா மற்றும் குடும்பத்தினர் இதுவரை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் இம்மாதம் 24-ம் தேதிக்குள் அவர்கள் ஆஜராகாவிட்டால், அவர்களை கைது செய்வதற்கான வாரண்ட் நேற்று பிறப்பிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், லோக் ஆயுக்தா நீதிபதி சுதீந்திரா முன் இன்று ஆஜராயினர். பின்னர் வழக்கு விசாரணை 24-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா மற்றும் அவரது 2 மகன்கள், மருமகன், கிருஷ்ணய்யா ஆகியோர் இன்று ஆஜரானதால் அவர்கள்மீது பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+