சங்கரன்கோவில் டிஎஸ்பி கலிபுல்லா இடமாற்றம்
Subscribe to Oneindia Tamil
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் டிஎஸ்பி கலிபுல்லாவை தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது.
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் வரும் 18ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் சங்கரன்கோவில் தொகுதி முழுவதும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. தேர்தலில் முறைகேடுகள் நடப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சங்கரன்கோவில் பகுதி டிஎஸ்பி கலிபுல்லாவை இடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் திடீர் உத்தரவிட்டுள்ளது. கலிபுல்லாவுக்கு பதிலாக விளாத்திகுளம் துணை சூப்பரண்டு மகேஷ் சங்கரன்கோவில் பகுதி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications