கார் கேட்டு அடம்பிடித்த புது மனைவி: விவாகரத்து கொடுத்த கணவர்

Subscribe to Oneindia Tamil

கோலாலம்பூர்: மலேசியாவில் திருமணமான ஒரு மணி நேரத்திலேயே தனது காதல் மனைவியை ஒருவர் விவகாரத்து செய்ய விண்ணப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் லீ(23) என்பவர் தனது காதலி வாங்கை(27) சார்பதிவாளர் அலுவலகத்தில் வைத்து பதிவு திருமணம் செய்து கொண்டார். அப்போது அங்கு ஒரு கார் டீலர் வந்துள்ளார். அவரைப் பார்த்த வாங் தனக்கு புதிய கார் ஒன்றை வாங்கித் தருமாறு கணவரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு லீ மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த வாங் தனது கணவருடன் தகராறு செய்துள்ளார். அவர்களின் தகராறு முற்றியபோது புதிய கார் வாங்கித் தரவில்லை என்றால் உன்னை விவாகரத்து செய்துவிடுவேன் என்று வாங் மிரட்டியுள்ளார். ஆனால் லீ அதற்கும் மசியவில்லை. இவ்வளவு பிடிவாதம் பிடிக்கும் மனைவி தேவையில்லை என்று நினைத்த அவர் வாங்குடன் விவாகரத்து பிரிவுக்கு சென்று அதற்கான விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து கொடுத்தார். இதையடுத்து அவர்களுக்கு விரைவில் விவாகரத்து கிடைக்கவிருக்கின்றது.

கார் கேட்டு மனைவி அடம்பிடித்ததால் திருமணமான ஒரு மணி நேரத்திலேயே அவரை கணவர் விவகாரத்து செய்த சம்பவம் மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+