ஹைதராபாத்தில் 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல்: தீவிர சிகிச்சை
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தில் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 45 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களிடம் நடத்திய மருத்துவ பரிசோதனையில் 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து 4 பேரும் ஹைதராபாத் அரசு மருத்துவமனையில் உள்ள தனியறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.
ஆந்திர மாநிலம் முழுவதும் பன்றிக்காய்ச்சல் பரவுவதை தடுக்கும் முயற்சியில் சுகாதார துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து டாக்டர் கிருஷ்ணய்யா கூறியதாவது,
பன்றிக்காய்ச்சல் வழக்கமாக மழை மற்றும் குளிர் காலங்களில் மட்டுமே பரவும் தன்மை கொண்டது. ஆனால் தற்போது கோடை காலத்தில் பரவி வருவது வியப்பை அளிக்கிறது என்றார்.












Click it and Unblock the Notifications