'ஷாக் அடிக்குது.. ஷாக் அடிக்குது'.. அணு மின்சாரத்துக்குள் மதத்தை 'புகுத்தும்' ராம கோபாலன்!

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பாதுகாப்பு குறித்து வல்லுநர் குழுவின் அறிக்கையை ஆய்ந்து அணுமின் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுத்த தமிழக முதல்வரை இந்து முன்னணி பாராட்டுகிறது.
தொழில் நகரமான திருப்பூர், கோவை, ஈரோடு முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 8 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு ஏற்பட்டு தொழில், விவசாயம், வியாபாரம் போன்ற துறைகள் செயல்பட முடியாமல் தடுமாறிவருகின்றன. கூடங்குளம் அணு மின் நிலையம் உடனடியாக செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுத்ததன் மூலம் இது சீர் செய்யப்பட்டு மின் தட்டுப்பாடு குறைந்து தொழிலும், விவசாய உற்பத்தியும் பெருகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் கூடங்குளம் போராட்டம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் அவர்களும், மத்திய அமைச்சர் நாராயணசாமி அவர்களும் இதனைத் தூண்டி நடத்துபவர்கள் வெளிநாட்டுச் சக்திகள் என்றும், கிருஸ்தவர்களால் நடத்தப்படும் அரசு சாரா அமைப்புகளுக்குக் கிடைத்திடும் வெளிநாட்டுப் பண பலத்தால்தான் இந்த எதிர்ப்புப் போராட்டம் நடைபெறுகிறது என்றும் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
வெளிநாட்டின் உதவி என்ற பெயரில் வரும் கொழுத்த பணத்தால் தனி அரசாங்கத்தையே இவர்கள் நடத்தி வருகிறார்கள். இந்த அபாயத்தை மத்திய, மாநில அரசுகள் தற்போது உணர்ந்துள்ளன. இதனால் அரசு சாரா தன்னார்வத் தொண்டு அமைப்புகளைத் தீவிர விசாரணை செய்து மக்களுக்கு அவர்களின் நிழல் உலக செயல்பாடுகளை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எதிர்ப்பாளர்கள் என்ற போர்வையில் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியைத் தடுத்து வந்தது கிருஸ்தவ சர்ச் மிஷனரிகள் என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. இவர்களின் தனி அரசாங்கத்தால் தான் தமிழக அரசு அணு மின் நிலையத்தைத் திறக்க நடவடிக்கை எடுத்ததை அடுத்து சர்ச்களில் மணியடித்து மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களைக் கரை திரும்ப வைத்து போராட்டத்தைத் தூண்டியுள்ளனர்.
இப்போராட்டத்தில் கிருஸ்தவ சர்ச்களுக்குச் சம்பந்தமில்லை என்று சில நாட்களுக்கு முன்பு அறிவித்துத் திசை திருப்பினர். ஆனால் போராட்டம் நடத்த சர்ச்சில் இடம் அமைத்துக் கொடுத்தும், சர்ச்சில் மணியடித்து மக்களைத் திரட்டி வன்முறையைத் தூண்டியும், பணபலம் ஆள்பலம் கொடுத்தும் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்க சூழ்ச்சி செய்துள்ளனர். கிருஸ்தவர்களின் சூழ்ச்சியை அரசு முறியடிக்க வேண்டும். தமிழக மக்களும் கிருஸ்தவ சதியை உணர வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக பல்லாயிரக்கணக்கான கோடி நிதியின் வரவையும், அவர்கள் செய்யும் சதியையும் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலம் ஒடுக்க வேண்டும். அன்னிய சக்திகளால் நமது நாட்டின் பாதுகாப்பு, இறையாண்மை, சுதந்திரம், பொருளாதார, அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றிற்கு ஏற்பட்டுள்ள அபாயம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்களை எதிர்தது இந்து முன்னணி மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை நடத்தியது. ராஜபாளையம், திருநெல்வேலி மாவட்டங்களில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் கூட்டம் கூட நடத்த முடியாத நிலையை மக்கள் சக்தியின் துணைகொண்டு ஜனநாயக ரீதியில் போராடி இந்து முன்னணி வெற்றி பெற்றது. இந்நிலையில் தமிழக முதல்வர் அணு மின் நிலையம் செயல்பட எடுத்த நடவடிக்கை, இந்து முன்னணிக்குக் கிடைத்த தார்மீக வெற்றி என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.
கூடங்குளம் பகுதி வளர்ச்சிக்குத் தமிழக அரசு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதைப் பாராட்டுகிறோம். இந்த நிதி, அங்கு வாழும் அப்பாவி பொதுமக்களின் நலனுக்கே போய்ச் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதில் எந்த ஒரு பகுதியும் தயவுதாட்சண்யம் காட்டி சர்ச்சினால் ஆதாயம் பெற்று அரசுக்கு எதிராக செயல்படுவோருக்குப் போய்ச் சேரக்கூடாது. சர்ச்களுக்கும் என்.ஜி.ஓ. அமைப்புகளுக்கும் வரும் நிதியையும் மத்திய, மாநில அரசுகள் சமூக நலத்துறையின் மூலம் அனைத்து மக்களுக்கும் உதவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார் ராமகோபாலன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications